சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி இரணைமடு குளத்தின் கீழ் பயிர்ச் செய்கை.

இரணைமடு குளத்தின் கீழ் முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி பயிற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்கீழ், சேதனை பசளையை மட்டும் பாவித்து  2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கை  20,882 ஏக்கர் பரளப்பளவில் இரணைமடு குளத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூட்டமொன்று  மெய்நிகர் செயலி ஊடாக நேற்று இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இந்த தகவலை வெளியட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை கால போக பயிர்ச் செய்கை ஆரம்ப திகதி 06.10.2021 ஆகவும் இறுதி அறுவடைத் திகதி 28.02.2022 ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் புதிய கொள்கைக்கு அமைவாக சேதனப் பசளையை மட்டும்  பயன்படுத்தி பயிர்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம் முறை 500 ஏக்கர் பரளவு கொண்ட காணிகள் புதிதாக  நெற் பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்திற்கு 90.2 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் அரசினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவை சேதனை பசளை உற்பத்தியை ஊக்குவிபதற்காகவே வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.