ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமராவை வானில் பறக்க விட்ட இருவரை  மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து குறித்த ட்ரோன் கெமரா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட மணல் பூங்காவில் குறித்த இரு சந்தேக நபர்களும் ட்ரோன் கெமரா பறக்க விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேக நபர்களை  இன்று கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.