பாரிய அரச மரம் விழுந்து பிள்ளையார் கோயில் முற்றாக சேதம்

பாரிய அரச மரம் முறிந்து விழுந்ததில் ஏறாவூர் பற்று அரசமரத்தடி  பிள்ளையார் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று(25) அதிகாலை 2.20 மணி அளவில் பாரிய அரச மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அரசமரத்தடி  பிள்ளையார் ஆலயம் முற்றாக சேதமடைந்தது பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சேதமடைந்த ஆலயத்தை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதிக்கு பொறுப்பான அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று  உடனடியாக ஆலயத்தின் மீது விழுந்த அரசமரத்தை அகற்றுவதற்கான பணிகளை  முன்னெடுக்குமாறு ஏறாவூர் பற்று பிரதேச செய
லாளர் ராஜ் பாபுவை பணித்தார்.

  சேதமடைந்த ஆலயத்தை புனரமைப்பதற்கான  வேலைத்திட்டங்களை  மிக விரைவில் முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.