நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கொவிட் கட்டுப்பாட்டு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.