நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பினரால் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினரின்  இலவச மின் இணைப்பு வழங்களின் இரண்டாம் கட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எம். நிஸ்மி தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் கலந்து கொண்டு,  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  மின் இணைப்புக்கு பணம் செலுத்தப்படமைக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கி வைத்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் குறித்த பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.