துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

இச்சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.