ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு கும்புறுமுலை பகுதியில் நீண்டகாலமாக இராணுவமுகாம் அமைந்திருந்த சுமார் 12 ஏக்கர் காணியே இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து காணியை உரிமையாளரிம் கையளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி,
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, பிரதேச செயலாளர்களான ராஜ்பாவு, தனபாலசுந்தரம், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.