சேனை காட்டில் காணாமல் போன சிறுவன் நான்கு மணித்தியாலங்களுக்கு பின்னர் மீட்பு)

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியில் சேனை காட்டில் காணாமல் சிறுவன் நான்கு மணித்தியாலத்திற்கு பின்னர் காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
அத்தாபெந்திவெவ பகுதியில் உள்ள பழைய சேனை காட்டிற்குள் வட்டுக்காய் ஆய்வதற்காக சிறுவனின் தாய் மற்றும் அம்மம்மாவுடன் சென்றபோது சிறுவனை சைக்கிள் அருகில் நிறுத்திவிட்டு தாயும் அவரது அம்மம்மாவும் வட்டுக்காய் பறித்துள்ளனர்.
இதேவேளை 3 வயது சிறுவன் பாலடைந்த வழி ஊடாக தாயாருக்கும் அம்மாவுக்கு தெரியாமல் இவர்களை தேடி சென்றுள்ளார்.
தாயும், அம்மம்மாவும் சிறுவனை நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தபோது சிறுவன் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் சிறுவனை குறித்த இடத்தை சுற்றிப் பார்த்த போது சிறுவன் இருக்கவில்லை எனவும் அதனை அடுத்து கிராம மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் இணைந்து காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர்.
 இந்நிலையில் சிறுவனை நிறுத்திய இடத்திலிருந்து 3 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள காட்டுப்பகுதியில்  நான்கு மணித்தியாலத்திற்கு பின்னர் சிறுவன் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போன சிறுவன் செனவிரத்னகே சாஜித் சுரங்க செனவிரத்ன மற்றும் ஹன்சிகா மதுவந்தி ஆகியோரின்  தினூஜ பெஹசர (03வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனது சிறுவனை மீட்டு தந்த பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளையும் சக உறவினர்கள் தெரிவித்தனர்