இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தீவு முழுவதும் பயணத் தடைகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது மே 31 முதல் அமுலுக்கு வரும் என்று ராணுவ தளபதிஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இருப்பினும், இந்த முடிவு அத்தியாவசிய கடமைகளை பாதிக்காது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.