விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(வயிரமுத்து திவாகரன்)

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் திரு.வே.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நேற்று (30) இடம்பெற்றது

இந் நிகழ்வுக்கு ஆத்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஸன் சுவாமி ஸ்ரீமத் நீலமகாதேவானந்த மகராஜ் அவர்களும், பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திரு.க.கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களும், உயர் கற்கை நிறுவன பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன் அவர்களும், மற்றும் ஏனைய கல்லூரியின் பங்குதார நிறுவனத் தலைவர்கள், கல்லூரி பணியாளர்கள், பயிலுனர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்

இதன்போது சுவாமி ஸ்ரீமத் நீலமகாதேவானந்த மகராஜ் அவர்கள்  குறிப்பிடுகையில் ஒரு அமைப்பு தொடர்ச்சியான வளர்ச்சியினை பெறுவதாயின் அதன் கொள்கைகளை சரியான முறையில் பற்றிக்கொள்வது தான் சிறந்த வழி என்றும், அதன் அடிப்படையிலே இந்த கல்லூரியூம் செயற்படுகின்றது எனவும் பயிற்சியுடன் சேர்த்து பயிலுனர்கள் தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்வதோடு, ஆன்மீக சிந்தனைகளையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான அவசியத்தையும் உணர்ந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கல்லூரி பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன்  குறிப்பிடுகையில் எமது விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியானது 2012 ம் ஆண்டு அனைவருக்குமான கணினி அறிவூ என்ற நோக்கில் ஆரம்பிக்க்பட்டாலும் காலத்தின் தேவைகருதி தொழில்வாய்ப்பினை பெறத்தக்க தொழில்நுட்ப பயிற்சிகளை ஆரம்பித்ததோடு, மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவில் தரமுகாமைத்துவ முறைமை ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரியாக பல NVQ பயிற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது எனவும் தற்போது இலங்கை மன்றத்தின் ஊடாக LINCOLN பல்கலைக்கழகத்தின் உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வகையிலான அங்கீகாரத்தினைப் பெற்றது முக்கிய மைக்கல் எனவூம் இன்றைய இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கணினி, காசாளர், தையல் போன்ற NVQ சான்றிதழ்களும் ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிப்பயிற்சிகளும் சேர்த்து 235 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என தெரிவித்து இந்த சான்றிதழ் வழங்கல் நிகழ்வினை  ஆரம்பித்து வைத்தார்.

மேலும் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் திரு.க.கருணாகரன் அவர்கள் குறிப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்கலைக்கழகம், இசை நடனகல்லூரி, தொழில்நுட்பக்கல்லூரி என்ற அரசின் உயர்கற்கை நிறுவனங்கள் இருந்தபோதிலும், விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி காலத்தின் தேவைக்கேற்ப பல மாணவர்களிற்கு பயிற்சியளித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருவதாக  குறிப்பிட்டார். அத்தோடு, போட்டிபோட்டு வளர்கின்ற இந்த யுகத்திலே முன்னேறவேண்டும் என்றால் எமது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவூம் மாணவர்களை கேட்டுக்கொண்டார். அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறு சிறப்பாக நடாத்தப்படுகின்ற இது போன்ற விழாவிற்கு கல்வி அமைச்சின் செயலாளர்கள் அல்லது மாகாண மட்ட கல்வி சம்பந்தப்பட்ட அமைச்சு செயலாளர்களை அழைத்து இதுபோன்ற விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்  தொழில்பயிற்சி மட்டும் இன்றி பல்வேறு சமூகம் சார்ந்த செயற்பாடுகளையூம் கல்லூரி மேற்கொண்டு வருவதாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது பாதிக்கப்ட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்கி வைத்தனர் என்றும், இதன் மூலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் இணைந்து பாரிய உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என  குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மாணவர்களினால் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக நிகழ்வகளும், நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த கலை நிகழ்வுகள் மாணவர்களின் திறமையினை பறைசாற்றுவதாகவும், சிறப்பான முறையில் நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இருந்தது என உரையாற்றிய விருந்தினர்கள் தெரிவித்தனர்.