அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மீண்டும் மழை

(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தில் நேற்று காலை (24) முதல் மீண்டும்; இடி மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

கடந்த சில தினங்கள் சீரானகால நிலை நிலவியபோதும் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இதனால் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்;; வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதுடன் சில வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில்; மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில், உள்ளிட்ட பல பிரதேசங்களிலும்; தொடர்ந்தும் மழை பெய்துவருகின்றது.

மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உருவாகுவதாக சுகாதார அதிகாரிகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மக்களை அறிவுறுத்;தி வருகின்றனர்.
ஆகவே நாம் மீண்டும் தொற்று நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை மக்கள் உருவாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
எனவே தொற்றுநோய் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு மக்கள் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.