ரீ.எல்.ஜவ்பர்கான்-
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் ரி.எம்.வி.பி.கட்சி தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட அவரது அலுவலக பணியாளர்களும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று கொவிட்-19 தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் அரச திணைக்கள அதிகாரிகள் சுகாதார துறையினர் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பாதுகாப்பினை மேற்கொள்ளும் வகையில் தமக்கான கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஈட்டுபட்டுள்ளனர்
.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அவரது பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அவரது பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது