கல்முனையில் சுகுணனுக்கு முதல் தடுப்பூசி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் முதலில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது .கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்  ஆரம்பித்து வைத்திருந்தார் .

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள்   கடமை புரியும் வைத்தியர்கள் சுகாதார ஊழியர்களுக்கு 4870 இத்தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது