2021 புதிய வருடத்தில் பாடசாலை ஆரம்பிப்பதற்க்கான கூட்டம் மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை அதிபர் என்.கருணைதாசன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2021.01.11ம் திகதியில் பாடசாலை ஆரம்பிப்பதற்க்கும் , கொவிட் 19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்க்குமான வழிமுறைகள் ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் பின்பற்றிக் கொண்டு மாணவர்கள் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தியதோடு பெற்றோருக்கான விழிப்புணர்வு ஆலோசனைகளையும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்சுகாதார உத்தியோகஸ்தர் தெளிவு படுத்தினார்.
இக் கூட்டத்தில் கிராம சேவை உத்தியோகஸ்தர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் சுகாதார பாதுகாப்புடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.