மனைப் பொருளாதார செயற்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விதை இனங்கள்

( வாஸ் கூஞ்ஞ)

சுயதேவை பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி அதிமேதகு  கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவாகி தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற  பத்து இலட்சம் மனைப் பொருளாதார செயற்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2000 பயனாளிகளுக்கான விவசாய உற்பத்திஇ  விதை இனங்கள் (ரேவள) வழங்கும் நிகழ்வில் முதல் கட்டமாக 50 பயனாளிகளுக்கு வியாழக்கிழமை  (17.12.2020) உணவு விவசாய தாபனத்தின் அனுசரணையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சூகாதர் சூமஸ்தான் அவர்களினால் மன்னார் நகர பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு கையளித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ஆ. பிரதீபன்இ மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. ஷகீலா பானு உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள்இ பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.