கிழக்கில் 458யை தாண்டிய கொரனா தொற்று.அக்கரைப்பற்று சந்தை 294

( சகா, படுவான் பாலகன்)

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு சதத்தையும் தாண்டியது. இங்கு தொற்றானது நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது.  கிழக்கில் இதுவரை பேலியகொட கொத்தணி ஊடாக 458 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் 329பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 294பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

கல்முனைப்பிராந்தியத்தில் புதிதாக அட்டாளைச்சேனையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 35பேர் தொற்றிலுள்ளனர்.

இறுதியாக அக்கரைப்பற்றில் 37பேரும் அட்டபளச்சேனையில் 13பேரும் ஆலையடிவேம்பில் 3பேரும்; திருமலை உப்புவெளியில் இருவருமாக இனம்     இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 96பேரும் கல்முனை பிராந்தியத்தில் 329பேரும் திருமலை மாவட்டத்தில் 18பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 15பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கிழக்கில் தற்போதைய நிலைவரப்படி கல்முனைப்பிராந்தியம் 329தொற்றுக்களுடன்  முன்னிலைவகிக்கிறது.அதிலும் புதிதாக உருவான அக்கரைப்பற்றில் 227 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொருபிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது.

அடுத்தாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக   அட்டாளச்சேனையில்35 பேரும் சாய்ந்தமருதில் 14 பேரும் ஆலையடிவேம்பு, இறக்காமத்தில் தலா 11பேரும் ஏறாவூரில் 10பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.

சிகிச்சை நிலையங்களில் 1478 அனுமதி

கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 321கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்று வரை 1478பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1151பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.06பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 145கட்டில்கள் எஞ்சியுள்ளன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் இன்றுவரைவரை 550பேர் அனுமதிக்கப்பட்டு 449பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 97பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.

மேலும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 43 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  19பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 85 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பிசிஆர் ,அன்ரிஜன்ற்பரிசோதனைகள்

இதுவரை கிழக்கில்     18326பேருக்கு பிசிஆர்,அன்ரிஜன்ற்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 6450 பிசிஆர், அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 8317 சோதனைகளும் மட்டக்களப்பில் 6457 சோதனைகளும் அம்பாறையில் 2028சோதனைகளும் திருகோணமலையில் 1524சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 கடந்த 24 மணித்தியாலயத்தில்மாத்திரம் கிழக்கு மாகாணத்தில் 1045 பேருக்கு அன்ரிஜன்ற் . பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாகாணப்பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.