கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம்(18) மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டிலும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளினையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஓராட்டு பூர்த்தியையும் சிறப்பித்து பூசை, வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம், பிரதேச கலாசார உத்தியோகத்தர் ந.ருபேசன், ஆலய வண்ணக்கர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.