முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பது மனித மாண்புக்கு அரசாங்கம் கொடுக்கும் கௌரவமாகும் – அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர்

முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பது மனித மாண்புக்கு அரசாங்கம்  கொடுக்கும் கௌரவமாகும் – அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா  உமர்
நூருள் ஹுதா உமர்.
கோவிட் – 19 பாதிப்புக்குள்ளான முஸ்லிங்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்படுவது முஸ்லிங்களுக்கு மட்டுமல்ல மனிதநேயமுள்ள எல்லா சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. விரைவில் உலக சுகாதார ஸ்தாபன அறிக்கைக்கு ஏற்ப இந்த அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பு, அரசு முஸ்லிங்களுக்கு வழங்கும் கௌரவமல்லாது மனித மாண்புக்கு கொடுக்கும் கௌரவமாக இருக்கும் . முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதில் இருந்து நல்லடக்கம் செய்யப்பட்ட வேண்டும் என எல்லா முஸ்லிங்களும் இறைவனை பிராத்திப்போம். இறை சக்தியை விட பெரிய சக்திகள் எதுவுமில்லை என அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா  உமர் அரசுக்கு தெரிவித்தார்.
மாளிகைக்காடு மக்களின்  நன்மை கருதி அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா  உமர் கல்முனை மாநகர பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்ஸூரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பினால் (YMWA ) மாளிகைக்காடு அந் – நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கான முஸ்லிம் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் பெட்  அந் – நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகளிடம் கடந்த ஜும்மா அன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஐயாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் முஸ்லிம் மையவாடியான மாளிகைக்காடு அந் – நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடிக்கு இதுவரை  இல்லாது இருந்த இந்த குறையை நிவர்த்தி செய்யவேண்டும் என அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா முன்வைத்திருந்த கோரிக்கையை துரிதகெதியில் நிவர்த்திசெய்து தந்த சகலருக்கும் இவ்வேளையில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் தனது உரையில் தெரிவித்தார். மேலும் கோவிட் – 19 பாதிப்புக்குள்ளான முஸ்லிங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது வேதனையளிப்பதாகவும் விரைவில் இந்த அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்க எல்லா முஸ்லிங்களும் இறைவனை பிராத்திக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்ஸூரின் பிரத்தியோக செயலாளர் முகம்மது ஸப்ராஸ், எம்.சி. ஷம்ஸுல் முனா, அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் உப தலைவர் பீ.எம்.நாஸிக், அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாளிகைக்காடு அந் – நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் போஷகர் பௌசர் ஹாஜி உட்பட நிர்வாகிகள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மாளிகைக்காடு அந் – நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் முஹம்மத் ஸப்ராஸ் (ஷஃதி) துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.