பைஷல் இஸ்மாயில்
69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முன்முறையாக இன்றைய தினம் (16) பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னமும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
திருகோணமலை சீனக்குடா முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டது.