இலங்கை விமானப் படை வரலாற்றை முதல் முறையாக பெண் விமானிகள் நியமனம்.

பைஷல் இஸ்மாயில்
69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முன்முறையாக இன்றைய தினம் (16)  பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன்  விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னமும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
திருகோணமலை சீனக்குடா முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.