மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொரனா.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர் காத்தான்குடி 6ம் குறிச்சியை சேர்ந்தவர் எனவும் கொழும்பில் பணிபுரியும் இவர் கடந்த 29ம் திகதி காத்தான்குடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.