சுபோஜன்
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அரச அதிகாரிகளை ஏற்றிவந்த பஸ் மீது மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் மீது இன்று இரவு இந்த கல்வீச்சில் நடாத்தப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கான இந்த பஸ் சேவையானது அண்மையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.