2020 அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை.

அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாவது தவணை 2020 அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாவது தவணைக்கான கால விடுமுறை அன்றிலிருந்து தொடங்கும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளும் 2020 ஆம் ஆண்டில் நவம்பர் 9, 2020 திங்கட்கிழமை மூன்றாவது  தவணைக்காக மீண்டும் திறக்கப்படும்