10.48 மணிக்கு எழுந்து நின்று திலிபனுக்கு அஞ்சலி செலுத்திய மக்களும் தலைவர்களும்.

நல்லூர் கந்தன் ஆலய  வீதியில் 12 நாட்கள்  உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் தமிழ்பேசும் மக்களுக்காக இவ்உலகைவிட்டுப்பிரிந்தார்.

அவரது உயிர் பிரிந்த 10.48 மணிக்கு  இன்றுஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் இடம்பெறும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்திலே இவ்வாறு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.