ஒருவாரம் பாடசாலைகள் மூடப்படுகிறது. கல்வி அமைச்சு தெரிவிப்பு

(சுடர்) ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய காலச்சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழக்பெருமாள்  தெரிவித்தார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலில் அதிகரிக்கும் கொரனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.