பாராளுமன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல்

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலில்  நேற்று 24  உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை தேர்தல்களில் வெற்றிபெறுவது குறித்த நம்;பிக்கையின்மை காரணமாக முன்னைய அரசாங்கம் மாகாணசபைகள் தேர்தலை நடத்தவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.