மட்டு.மேற்கு கல்வி வலயத்தில் நிலக்கடலை அறுவடை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அமைந்துள்ள வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யும் நிகழ்வு  திங்கட்கிழமை இடம்பெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலய பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது, வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வாழைக்குலை, மாங்காய் போன்றனவும் அறுவடை செய்யப்பட்டதுடன், குறித்த உற்பத்தி பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டன.