மட்டக்களப்பு பழுகாமத்தில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு.

(செ.துஜியந்தன்)மட்டக்களப்பு வாழ்வகம் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் மூலம் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று பழுகாமம் கிராமத்தில் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இணைப்பாளர் வி.ஆர். மகேந்திரன் தலைமையில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் தாயகத்திலுள்ள மக்களுக்கான செய்துவரும் இவ் மனிதாபிமானப்பணி பாராட்டத்தக்கதாகும் என அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.