கூட்டமைப்புக்குள் உள்ள நல்லவர்களை ஆதரியுங்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள்

பாறுக் ஷிஹான்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் அதே வேளை சுமந்திரன் போன்ற கறுப்பாடுகளை களைந்தெறிய வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள் . தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள்
கல்முனை பகுதியில்  புதன்கிழமை(13) முற்பகல்  கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர்    ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு   மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

இன்று பல அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றது குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள் . தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் ஆனால் இடையிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , சுமந்திரன் போன்றோர்கள் ஊடகங்களுக்கு அவ்வப்போது விடுதலை புலிகளை ஏற்றுக்கொள்ள வில்லை என தெரிவித்துள்ளனர்.

சுமந்திரன் போன்றோர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என வடக்கு  தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் போன்றவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று கொண்டு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் பாராளுமன்ற கதிரையை வெறுமனே அலங்கரித்து கொண்டு வருகின்ற சிங்கள தலைவர்களுடன் கைகோர்த்து ஏட்டிக்கு போட்டியாக தமிழ் மக்களை விலை பேசி வருகின்ற கூத்தாடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் அதே வேளை சுமந்திரன் போன்ற கறுப்பாடுகளை களைந்தெறிய வேண்டும் என்றார்.

எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் இருந்தும் கூட அரசியல் கைதிகளை விடுவிக்கப்படவில்லை. அன்று இருந்த ரணில் அரசாங்கத்திடம் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் அரசியல் கைதிகளை விடுவித்திருக்க முடியும். தேர்தல் காலங்களில் கூட்டமைப்பின் நாடகங்கள் அரங்கேறுவது உண்மையான டையம்  சுமந்திரன் போன்ற புல்லுருவிகளை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும்

  கிழக்கு மாகாணத்தில் சுமந்திரனின் கருத்துக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போயிருக்கிறார்கள் ஏனென்றால் நான் மக்களோடு மக்களாக நேரடியாக உரையாடுபவன்  இந்த காரணத்தினால் மக்கள் கொந்தளித்திருப்பது  எனக்கு தெரிந்திருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் உறுப்பினர்களில் எவருமே போராட்டத்தைப் பற்றி கதைக்க அருகதையற்றவர்கள் ஏனென்றால் அவர்களுக்கு போராட்டத்தைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் தியாகத்தில்  எழுந்த மாவீர்களையோ அல்லது அவர்கள் குடும்பத்தில் ஒருவரையாவது இழந்தவர்கள்  அல்ல.

இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி தங்களது குடும்ப நல சுகபோகங்களுக்காக மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று கட்சி மாறுபவர்கள் பாரம்பரியத்தை மறந்து தற்போது செயற்படுகின்றனர்.

குறிப்பாக கோடீஸவரன் என்பவர் ரெலோ கட்சியில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று பிறகு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக வந்தவர் பின்னர் அக்கட்சியிலிருந்து தமிழரசு கட்சிக்கு  தாவியவர்  அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் புளொட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வாக்குகளைப் பெற்று  தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் .இவர்களுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் துணை போகக் கூடாது அதேபோன்றுதன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம், துரைரெட்ணம் யோகேஸ்வரன் போன்றோர் மக்களுக்கு எந்தவித சேவைகளையும் செய்யவில்லை. இவர்களை குறித்து மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்  என்றார்.