மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டல்லாஸ் அலகாபெருமா தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பட்டம் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பெறப்பட்டதா என்பதில் கவனம் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.