மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களுக்கு பெரன்டினா நிறுவனத்தினால் இலத்திரனியல் உபகரணங்கள்

-க. விஜயரெத்தினம்)

விவசாயம் அமைப்புக்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்றது.   

பெரன்டினா நிறுவனமானது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்   மாவட்ட  செயலகங்களுடன்  இணைந்து மாவட்ட ரீதியாக  கிராம மட்டங்களில்  பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து மேம்படுத்தி வருகின்றது.தற்போது புதிய தகவல் தொழிநுட்பமானது மனித சமுதாயத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.இதனை கருத்திற்கொண்டு புதிய தகவல் தொழிநுட்ப யுகத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களையும் இணைக்கும் வேலைத்திட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் கிராம மட்டத்தில் தொழிநுட்ப பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.இதனால் நகரங்களுக்கும்,கிராமங்களுக்கிடையிலான தொடர்பாடல்திறன் விருத்தியடையும்.

இதற்கு அமைய  மூன்று வருட திட்டமாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்  இயங்குகின்ற  விவசாய அமைப்புக்கள்,மற்றும் மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களின்  தகவல் தொடர்பாடல் பரிமாற்ற நடவடிக்கைகளை  மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதற்கான இலத்தரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் கீழ் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  8 பிரதேச பிரிவிகளில் தெரிவு செய்யப்பட  30  கிராம சேவையாளர் பிரிவுகளில்  இயங்குகின்ற  30 விவசாய அமைப்புக்களும்,மற்றும் 30 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும்  மடிகணணிகள் , கையடக்க தொலைபேசிகள் மற்றும்  பிரிண்டர் இயந்திரங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட பெரன்டினா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் என்.நிசாந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டு  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட  ஏறாவூர் பற்று செங்கலடி , கோரளைப்பற்று தெற்கு கிரான் ,கோரளைப்பற்று வாழைச்சேனை , கோரளைப்பற்று வடக்கு வாகரை ,கோரளைப்பற்று ஓட்டமாவடி ஆகிய பிரதேச பிரிவுகளில் இயங்குகின்ற 30 விவசாய அமைப்புக்களும்   மற்றும் 30 மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களுக்கும்  இந்த இலத்தரனியல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  திருமதி எஸ்.புண்ணியமூர்த்தி  மாவட்ட பெரன்டினா நிறுவன  உத்தியோகத்தர்கள் மற்றும்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் , விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.