சாய்ந்தமருதில் 3 மீனவர்களை காணவில்லை

அம்பாறை, சாய்ந்தமருது நடுத்துறைக் கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக, ஏனைய மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை மீன்பிடிக்காக படகொன்றில் கடலுக்குச் சென்றிருந்த குறித்த மீனவர்கள் மூவரும், மறுநாள் காலை கரை திரும்ப வேண்டும். ஆனால்,  மூன்று நாட்களாகியும் இதுவரையில் அவர்கள் கரை திரும்பவில்லை எனவும், ஏனைய மீனவர்கள் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். அமீர் அலி, எம்.அன்சார் மற்றும் எம்.எஸ்.நாஸர் ஆகிய மீனவர்களே காணாமல் போயுள்ளனர்.

இவர்களை தேடும் பணியில் நான்கு படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதோடு, இவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளதாக, ஆழ்கடல் மீனவர் சங்கத்தின் தலைவர் ஏ. ஹமீட் தெரிவித்தார்.