சந்தேகத்திற்கிடமான பொதியால் மட்டு.வில் பதற்றம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பை ஒன்றினால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

 

கூழாவடி பகுதியில் வீதி ஓரத்தில் காணப்பட்ட பை ஒன்றினை அவதானித்த அப் பகுதி மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிசார் அப் பகுதிக்கான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன்,குண்டு அகற்றும் பிரிவினருக்கு தகவல்களையும் வழங்கியுள்ளனர்

குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்த குண்டு அகற்றும் பிரிவினர் குறித்த பையினை சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அந்த பகுயில் இருந்து வீடியோ கமரா ஒன்றும், மின்கலம், சாஜர்  என்பன மீட்கப்பட்டுள்ளன.

 

மீட்கப்பட்ட பொருட்கள் குண்டு அகற்றும் பிரிவினறினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மேலதிக சோதனை நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குண்டு அகற்றும் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.