DRONES விமானங்களை பயன்படுத்த தடை

நாட்டில் எந்தவொரு ட்றொன் (DRONES) அல்லது ஆள் இல்லாத விமானங்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்எம்சி விமால் சிறி அறிவித்துள்ளர். இதற்கமைவாக இதனை பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றவர்களது அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்..