நேற்று வெளியாகிய க.பொ.த.சா.த.பரீட்சைப்பெறுபேறுகளின்படி காரைதீவுக்கோட்டத்தில் 9மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளனர்.
காரைதீவு இ.கி;மிசன் பெண்கள் பாடசாலையில் 8மாணவிகளும் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவனும் சித்திபெற்றுள்ளதாக அதிபர்களான எஸ்.மணிமாறன் ஆர்.ரகுபதி ஆகியோர் தெரிவித்தனர்.
இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் லோகநாதன் புவித்திரா, சகாதேவராஜா டிவானுஜா, லோகநாதன் வித்யாஷினி,சிவயோகராஜா லக்க்ஷிகா, இளஞ்செழியன் ரிலக்க்ஷினி ,இரவீந்திரன் திஜஸ்வினி, மேகநாதன் நிலுக்சிகா, விஸ்வலிங்கம் டோமிகா ஆகிய எட்டு மாணவிகள் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
இதில் அப்பாடசாலை வரலாற்றில் சாதனையாகக்கருதப்படுகிறது. இதற்குமுதல் 5மாணவிகள் 9ஏ சித்திபெற்றதே வரலாறுஆகும். எனவே இம்முறை உச்சக்கட்டச்சாதனையாக 8மாணவிகள் சித்திபெற்றுள்ளதையிட்டு கல்விச்சமுகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இதேவேளை காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் குவேந்திரன் என்ற மாணவன் 9ஏ சித்திப்பெற்றுள்ளார்.
காரைதீவு விபுலாநந்த மத்தியகல்லூரியில் 8ஏ1பி என்ற சித்தியை இருமாணவர்கள் பெற்றுள்ளதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்தார்.