(க.கிஷாந்தன்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு பேர் 14.03.2019 அன்று கைது செய்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.
நீண்ட காலமாக தோட்ட பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட ;கலால் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளும் 15.03.2019 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தோட்டப்பகுதிகளுக்கு கஞ்சா விநியோகிப்பவர்களையும் இனங்கண்டு அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.