படுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவினைச் சிறப்பித்து இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்னொளியினை எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் திறந்து வைக்கவுள்ளதுடன், அன்றிரவு உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளும் நடைபெறவுள்ளன.

பொன்விழாவினை சிறப்பித்து, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிறிக்கட், வலைப்பந்து மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களும் தொடர்ச்சியாக இரவு மற்றும் பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளன.

படுவான்கரைப்பிரதேசத்தில் வரலாற்றில் முதன்முறையாக நீண்ட நாட்களுக்கு மின்னொளியிலும், சூரியவெளிச்சத்திலும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.