உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. மாகாண, மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டல் அறிக்கை நேற்று வழங்கப்பட்டது.