கிழக்கு ஆளுநருக்கு காத்தான்குடியில் வரவேற்பு

பஹ்த் ஜுனைட்)
புதிதாக கிழக்குமாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
அவர்களை வரவேற்கும் நிகழ்வு  திங்கட்கிழமை(7)  காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் வரவேற்பு நிகழ்வில் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், நகரசபை உறுப்பினர்கள், உலமாக்கள்,பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டு புதிய ஆளுநரை வரவேற்றதுடன்
நினைவு சின்னங்கள் வழங்கியும் கெளரவித்தனர்.