மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் இம் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையாற்றுவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிப்பதற்கு, நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்காக 800 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவை ஆணைக்குழுவிற்று அனுப்பவுள்ளதாகவும் சல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.