உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நள்ளிரவிற்கு முன்னர் வௌியீடு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளை இன்று (29) நள்ளிரவிற்கு முன்னர் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை WWW.DONETS.LK என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை 3,21,469 பரீட்சார்த்திகள், பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.