ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் தனியார் வகுப்புக்களுக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்வதால் அவர்களால் அறநெறிப்பாடசாலை வகுப்புக்களுக்குச் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் தனியார் வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு¸ மீள் குடியேற்றம்¸ இந்து கலாசார அபிவிருத்தி¸ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்று நிருபங்கள் தற்பொழுது தயாரிக்கப்படுவதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும்¸ நல்லவர்களாகவும். கல்விமான்களாகவும் இருக்க வேண்டும் என்பது எல்லோரது மனதிலுமுள்ள ஆசையாகும், . இதற்கான நல்ல பண்புகளையும்¸ பழக்க வழக்கங்களையும் இளமையிலிருந்தே வழங்குகின்ற பணியை¸ இந்து சமயத்தைப் பொறுத்தவரை அறநெறிப்பாடசாலைகள் செய்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதால் மாணவர்கள்¸ அறநெறிப்பாடசாலைகளை தவிர்த்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காகத் தனியார் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்