நகரசபையின் அறிவுறுத்தலை மீறிய வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

நகரசபையின் அறிவுறுத்தலை மீறி, வர்த்;தக நிலையங்களை திறந்த ஒரு சில வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக, காத்தான்குடி நகரசபை, சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையங்களுக்;கு காத்தான்குடி நகர சபையால் பூட்டு போடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், நேற்று (16) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருள்கள், மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்;களைத் திறக்கக் கூடாது என்று,  காத்தான்குடி நகர சபை அறிவித்திருந்தது.

எனினும் அந்த அறிவித்தலையும் மீறி ஒரு சில வர்த்தக நிலையங்களைத் திறந்தவர்களுக்கு எதிராக காத்தான்குடி நகர சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் குறித்த வர்த்த நிலையங்களுக்கு நகர சபையால் பூட்டுப் போடப்பட்டன.

காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.