சார்வரி புதுவருடம் இன்றிரவு பிறக்கிறது

அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான ‘சார்வரி’ என்ற பெயரிலான சித்திரைப் புதுவருடம் இன்று 13ம் திகதி  திங்கட்கிழமை இரவு மலருகிறது.
வாக்கியபஞ்சாங்கத்தின்படி சார்வரி புதுவருடம் இன்றிரவு 7.26மணிக்குப்பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இரவு 8.23மணிக்குப் பிறக்கிறது. மறுநாள் காலை பொங்கல்வழிபாடு செய்யலாம்.

வாக்கியபஞ்சாங்கம். 

வாக்கியப்பஞ்சாங்கப்படி  விசுபுண்ணியகாலம் பிற்பகல் 3.26 மணிமுதல் முன்னிரவு 11.26 மணிவரையிலான காலபப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் யாவரும் மருத்துநீர் சங்கற்பித்து  சிரசில் இலவமிலையும் காலில் விளாவிலையும் வைத்து ஸ்ஞானம் செய்யவேண்டும்.

வெள்ளைப்பட்டாடையாயினும் வெள்ளைக்கரை அமைந்த புத்தாடையாயினும் அணிதல் நல்லது.
தோசநட்சத்திரங்களாகஅஸ்வினி கார்த்திகை 2ஆம் 3ஆம் 4ஆம் பாதங்கள் மிருகசீரிடம் 1ஆம் 2ஆம் பாதங்கள் மகம் பூரம் மூலம்  உத்தராடம் 1ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்துநீர் சங்கற்பித்து ஸ்ஞானம்செய்து தானதருமம் செய்து இறைவழிபாடு செய்யவேண்டும்.

கைவிசேடம் வியாழன்  16.04.2020 முன்னிரவு 10.37 முதல் 12.23 வரை                             வெள்ளி  17.04.2020 அதிகாலை 4.17முதல் 5.47வரை                             திங்கள் பிற்பகல் 12.06 முதல் 1.46 வரை நடாத்தலாம்.
வித்தியாரம்பம்  மற்றும் விருந்துண்ணல் என்பன   20.04.2020  பகல் 12.06 – 01.46 வரையும் 27ஆம் திகதி   பகல் 12.40 – 01.18வரையான காலப்பகுதியில் நடாத்தலாம்.
திருக்கணித பஞ்சாங்கம்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அன்று  மாலை நாழிகை 25.52 (மாலை 04.23 மணி) முதல் நள்ளிரவு நாழிகை 45.52 (இரவு 12.23 மணி) வரையும்  புண்ணியகாலம் ஆகும்.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளாவிலையும் காலில் கடம்பமிலையும்இவைத்து ஸ்நானஞ்செய்து வெண்ணிறப்பட்டாயினும் அல்லது வெள்ளைப்புது வஸ்திரமாயினுந் தரிக்கலாம்..

சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக பரணி கார்த்திகை 2,3,4 ஆம்பாதங்கள் ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம்பாதங்கள் பூரம் மூலம் பூராடம் உத்தராடம் 1ம்பாதம் ஆகியன. இவர்கள் கட்டாயம் மருத்துநீர் வைத்து வழிபடலவசியமாகும்.

கைவிசேடம் திங்கள்  13.04.2020 பின்னிரவு 5.20 _ 5.50 வரை                             வியாழன் 16.04.2020 இரவு 07.00 – 08.00 வரை                             வியாழன் 16.04.2020 இரவு 10.25 – 11.30 வரை நடாத்தலாம்.
வித்தியாரம்பம்    20.04.2020 காலை  09.15 – 09.45 யும்  விருந்துண்ணல் : 20.04.2020 பகல் 09.15 – 09.45 வரை                                                     22.04.2020 மாலை  06.00 – 07.30 வரையும் இடம்பெறலாம்.