அக்கரைப்பற்றைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரனா தொற்று

-கேதீஸ்-

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் அண்மையில் அம்பாறை  அக்கரைப்பற்றில் கட்டார் நாட்டில் இருந்து வருகைதந்திருந்த கொரனா தொற்று ஏற்பட்டிருந்ததாக அடையாளம் காணப்பட்வரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே கொரனா தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவரின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் 10 பேர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தனர் அவர்களில் எட்டுப்பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது இதில்  குறித்த நபரின் மனைவிக்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது எனவும்

  • அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 நபர்களும் கொரனா பரிசோதனைக்காக இன்று பொலனறுவை தாமின்ன கொரனா தடுப்பு பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுணன்  தெரிவித்தார்.