திருகோணமலை விவசாயிகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு

கமத்தொழில், கமநலக் காப்புறுதி சபையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் அனைத்து விவசாய ஓய்வூதியப் பயனாளிகளுக்கும்  தலா 5,000 ரூபாய் என்றடிப்படையில் இம்மாதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இக்கொடுப்பனவை, திருகோணமலை மாவட்டப் பயனாளிகளும் நாளை 6ஆம் திகதியும், 7, 8ஆம் திகதிகளில் உரிய தபால் நிலையம், உப தபால் நிலையங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என்று, மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.