ஜனாதிபதியின் விலைக்குறைப்பு மக்களைச் சென்றடையவில்லையென புகார்.

 (காரைதீவு   நிருபர் சகா) நாட்டுநிலைமை கருதி ஜனாதிபதியினால் விலைகுறைப்புச்செய்யப்பட்ட மீன்ரின் பருப்பு போன்றன புதிய விலையில் இன்னும் மக்களைச்சென்றடையவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனைப்பிராந்தியத்தில் பெரும்பாலான கடைகளில் குறித்த உணவுப்பொருட்கள் பழையவிலையிலேயே விற்கப்பட்டுவருகின்றன.

கடைஉரிமையாளர்களிடம் கேட்டபோது இன்னும் புதிய விலைக்குவிற்கவேண்டிய அப்பொருட்கள் எமக்கு வந்துசேரவில்லை. மேலும் பிரதேச செயலகத்திடமிருந்து அதுபற்றிக்கேட்டக்கப்பட்டது. எமது நிலைமையைகூறினோம். பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருக்குமாயின் அவற்றைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகக்கூறினார்கள். என்றனர்.

ச.தொ.ச விற்பனைநிலையம் சிலவற்றில் நேற்றுமுன்தினம் வந்த இவ்வுணவுப்பொருட்கள் வந்து ஒருசிலநிமிடங்களுள் தீர்ந்துவிட்டதாகக்கூறப்படுகின்றது.


காரைதீவுக்கான ச.தொ.ச. விற்பனைநிலையம் மூடப்பட்டுள்ளது. முகாமையாளிடம் கேட்டபோது இடம்தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். மொத்தத்தில் விலைக்குறைப்புக்கான பொருட்கள் இன்னும் மக்களை வந்தடையவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.