தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு புதிர் வழங்கி வைப்பு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் நேற்று(8) சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோருக்கு புதிர் நெல் வழங்கி வைக்கப்பட்டது.

தைப்பூச நாளில் இறைவனுக்கும் புதிர் பிரசாதம் படைக்கப்பட்டு,  விசேட பூசையும் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயத்திற்கு புதிர் பெற வருகைதந்த அடியார்களுக்கு புதிர் நெல்லும் வழங்கப்பட்டது.

பல பிரதேசங்களிலும் இருந்து,  வருகை தந்து,  என்றுமில்லாதவாறு ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வருடம் புதிர் நெல் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.