பட்டிப்பளையில் தமிழ்தேசிய பொங்கல் விழா.

தமிழ்தேசிய பொங்கல்விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்;முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பட்டிப்பளை விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை(18) பி.ப.02மணிக்கு நடைபெறவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.