இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின்(எஸ்.பி.எம்.சி) புதிய தலைவராக டாக்டர் உப்பலா இந்திரவன்ச

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின்(எஸ்.பி.எம்.சி) புதிய தலைவராக டாக்டர் உப்பலா இந்திரவன்ச இன்று காலை இலங்கை மருந்து தயாரிப்புக் கழகத்தின் (எஸ்.பி.எம்.சி) தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின்  பழையமாணவனான இவர் தனது மருத்துவ பட்டத்தை ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ மருத்துவ அகாடமியிலிருந்து பெற்றார்.

பொலன்னறுவை பொது மருத்துவமனையில்  உள்ளகப்பயிற்சியை முடித்த டாக்டர் உப்பலா இந்திரவன்சா 2001 முதல் 2009 வரை  பொலன்னறுவையில் உள்ள புலஸ்தி கிராம மருத்துவமனையில் பணியாற்றினார்.