திருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும்

கதிரவன் திருகோணமலை

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும் செவ்வாய்க்கிழமை 2019.11.05 மாலை திருகோணமலை அலஸ்தோட்டம் ஆனந்தபுரியில் அமைந்துள்ள கட்சியியின் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது.

கட்சியின் செயலாளர நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது டக்ளஸ் தேவாந்தா அங்கு திரண்டு வந்திருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறந்து கொண்டார். பெருமளவிலான பொது மக்கள் தென்னமரவாடி, திரியாய், தம்பலகாமம், மூதூர் கிழக்கு, ஈச்சிலமப்ற்று, குச்சவெளி, பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்.